Saturday, March 17, 2012

மார்ச் 18 - மெரீனா


சாதாரணமான ஒரு பார்வையாளனாக இது நாள் வரை இலங்கை சோகங்களை பார்த்துகொண்டு (மட்டும் ) இருந்த சராசரி இந்தியன் இந்த முறை சற்றே கோபமடைந்திருக்கிறேன்.  எந்த ஒரு மனிதனின் இதயத்தையும் உடைக்கும் விடியோக்களை சேனல் 4 வெளியிட்ட பிறகும் சாதரணமாக பாட்டு டெடிகட் செய்ய என் தமிழக தமிழர்களால் எப்படி முடிகிறது.. முள்வேலிக்குள் அடைபட்டு நிற்கும் மக்களின் கண்களின் தெரியும் எதிர்காலத்தை பற்றிய கேள்விக்கு சர்வதேச சமுதாயம் வேண்டாம், சக தோழனாய் நீ எப்போது ஆறுதல் சொல்ல போகிறாய்?. 40 கிலோமீட்டருக்கு அந்த பக்கம் மரண ஓலங்களின் சத்தம் காதைகிழிக்கும்போது கூட இயல்பை வெளிப்படுத்தும் கலையை எங்கே கற்றுக்கொண்டார்கள் எம் தமிழர்கள்.. உங்களை சொல்லி குற்றமில்லை, உங்களை வார்த்தெடுத்த தலைமுறையின் குற்றம் அது. இனியொரு தலைமுறை அப்படி இருக்காது. இறந்து போன மக்களுக்காக பேசி என்ன ஆகபோகிறது என்று கேட்கும் தமிழர்களுக்கு என் பதில், இனியும் இந்த கோரங்களுக்கு மௌனசாட்சியாய் நாம் இருந்தால் மிச்சம் இருக்கும் என் இன மக்களுக்கு விடியல் என்பதே இருக்காது.
  
 இதுவரை எந்த ஒரு விஷயத்துக்காகவும் வீதிக்கு வந்து எதிர்ப்பை தெரிவிக்காத இருபத்தி நான்கு வயது தமிழன் நான்.  இன்று மெரினாவுக்கு செல்லலாம் என இருக்கிறேன். மனிதனை மனிதனாக மதிக்காத சமூகத்துக்கு இன்னும் வக்காலத்து வாங்கும் இந்திய அரசிற்கு என் எதிர்ப்பை இறையாண்மைக்கு உட்பட்டு பதிவு செய்யப்போகிறேன்..


இணைவோம்!!! தமிழுக்காக, இனத்துக்காக என்றெல்லாம் அழைக்கவில்லை. மனிதத்துக்காக..  #KillingFields

No comments: