Thursday, July 8, 2010

மறுபடியுமா???

எதேச்சையாக தான் அந்த செய்தியை பார்த்தேன். பதறிவிட்டேன். இலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர் பலி. செய்தி ஏற்படுத்திய வலியை, தாக்கத்தை விட அதன் பின் விளைவுகள் தான் என்னை பின்னூட்டமிட வைத்து விட்டன.

எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். நாளை மறுநாளைய தினசரிகளில், முக்கியமாக மூன்றால் பக்கத்தில், தமிழக முதல்வர் கையில் பேனாவுடன் காட்சி கொடுப்பார்; கடிதம் எழுதி இருக்கிறேன் உடன்பிறப்பே என்பார். எல்லாம் தல விதிடா சாமி, கேட்டுத்தான் ஆகணும்.

இவரு எழுதுற  கடுதாசி எல்லாம் எங்கே தான் போகுதுனே தெரில.  இந்திய அஞ்சல் துறையை கேட்டால் நன்று என யோசித்தால், அந்த துறையின்  அமைச்சர் உயர்திரு அறுபதாயிரம் கேடியாக  இருக்கிறார். அவருக்கு கரோடியவுடன் பேசவே நேரம் போதவில்லை. பிறகு எங்கே கடிதத்தை தேட போகிறார்.

"எனது மிச்சமிருக்கின்ற லட்சியங்களான, புதிய சட்டசபை வளாகம், அண்ணா துரையின் பெயரிலான புதிய நூலகம், உலக தமிழ் செம்மொழி மாநாடு ஆகியவை முடிந்த பின், பதவியில் இருந்து விலகி உங்களில் ஒருவனாகப் போகிறேன்" என்று வாய்கிழிய பேசினார் பாச தலைவர்.  ( http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5929&ncat=&archive=1&showfrom=12/13/2009)
அப்பாடா!! இனிமேலாவது என் தமிழ்நாட்டை ஒரு இளைஞர் (அதாங்க, இளைஞரணி  தலைவர் திரு மு க ஸ்டாலின் (வயது 57) )  கையில் வர போகிறது என்று எண்ணினேன். ஆனால்,உலக தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த அடுத்த நிமிடமே இப்படியும் கூறினார்;உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என்று நான் கூறியதற்கு ஓய்வு பெறப் போவதாக அர்த்தமில்லை. நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் (செய்தியாளர்கள்) கூறினால் ஓய்வெடுக்கத் தயாராக உள்ளேன். நான் விலகியிருக்கட்டுமா? என்றார் சிரித்தபடியே.(http://thatstamil.oneindia.in/news/2010/06/28/never-said-retire-karunanidhi.html  )

இதை பார்த்தவுடனே தீவிர கவுண்டர் ரசிகனான எனக்கு ஒன்றே ஒன்று தான் நினைவுக்கு வருகிறது; 'இது உலக நடிப்புடா சாமி!!!!' ஆனாலும் இதனையும் வரவேற்று வாழ்த்து பாட ஒரு கூட்டமே தயாராய் இருக்கும், வைரமுத்து தலைமையில் ஜெகத்ரட்சகன் முன்னிலையில்.  முடிந்தால் முடிவை மறுபரிசீலனை செய்த முத்தமிழ் அறிஞருக்கு பாராட்டு விழவே நடத்தும், நமீதா குஷ்பூ உடன்.
கழக தொலைகாட்சியில் பார்த்து நாமும் களிப்படைவோம். 

உலத்திலேயே முதல் முறையாக ஒருவருடைய, ஒரு தனி மனிதனுடைய குடும்பத்திற்கு family tree  இருப்பது இவருக்கு மட்டும் தான்.


இவர்கள் யாரை பற்றியும் அறிமுகம் எழுத தேவை இல்லை. 23  வயதில் பல கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை விலைக்கு வாங்குகிறார் ஒருவர். அம்பானி பேரனா என்று பார்த்தால், இல்லை. அண்ணா பல்கலை கழகத்தில் படிப்பை பாதியில் விட்டவர்; அண்ணன் அஞ்ச நெஞ்சனின் மகன் தான் அவர். ஏன்டா, இவங்க வீட்டுல எல்லாம் வருமான வரி துறை சோதனையே வராதா? எல்லாம் தாத்தா இருக்கிற தெகிரியம்.

சரி, தனி மனித தாக்குதல்கள் வேண்டாம் என்றால், தமிழக முதல்வரின் கடந்த சில நாட்களின் செயல்பாடுகளை பார்ப்போமா???

ஐயோ சாமி பெட்ரோல் வெல எரிடுசுனு எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துதுன்னு சொன்னா, நம்ம தலைவர் கேரளா, மேற்கு வங்கத்துல என்ன செஞ்சாங்கன்னு கேக்குறார். அண்ணே நீங்க தமிழ் நாட்டு முதல்வர். இப்போ நாங்க கேக்குறோம், நீங்க என்ன செஞ்சீங்க?? இந்தியாவுலையே நம்ம மாநிலத்துக்கு தான் ரெண்டாவது இடம், வேற எதுலயும் இல்ல, பெட்ரோல் மேல போட்ற வரியில. விளங்கிடுவோம்ல!!!

கோடநாடு எஸ்டேட்டுக்கள் தேயிலை தொழிற்சாலை கட்டப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளதால், இதிலே உள்ள உண்மைகளை நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைக் கொண்டு விசாரித்து உண்மை விவரங்களை அரசுக்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விசாரிக்க சொன்னாலே விஷத்தை கக்குகிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இல்ல. எங்களுக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி, spectrum மேட்டர்ல.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் மதுபான ஆலை குறித்து ஜெயலலிதா பேசத் தயாரா. அதுதொடர்பான புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கத் தயாரா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுல என்னய்யா பேச வேண்டியிருக்கு?? தப்புன்னு தெரிஞ்ச தூக்கி உள்ள போடுங்கப்பா. என்ன ஒரு பஸ் தானே எரிய போகுது. போயிட்டு போகுது.

சென்னை: ஒரு ரூபாய்க்கு அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருள்கள், பஸ் கட்டணத்தை உயர்த்தாதது போன்ற செயல்கள் மூலம் விலைவாசி உயர்வின் பாதிப்பு சாதாரண மக்களிடமிருந்து திமுக அரசு அகற்றிவிட்டதால் தான் பாஜக- அதிமுக- கம்யூனிஸ்டுகள் கூட்டணி நடத்திய `பந்த்' வெற்றி பெறவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  "நீங்க சொன்னா வாக்கியத்த தஞ்சாவூர் கோயில்................. "

இவரு ஒண்ணுமே நல்லதே செய்யலியா அப்டின்னு கேட்டா, செஞ்சுருக்கார். மாற்று திறனாளிகளுக்கு திருமண நிதி உதவி உயர்வு.  பாராட்டுகிறேன்..

கடைசியாக,
இவரை பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பல முறை யோசித்து பார்த்தேன். என்னை விட நான்கு மடங்கு வயதில் மூத்தவர். தமிழக அரசியலில் எழுபத்தி ஐந்து வருடங்களாக இருப்பவர், சட்ட சபையிலே பொன் விழா கண்டவர், இரண்டு முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்க காரணமாய் இருந்தவர், அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுப்பவர், சிறந்த ராஜதந்திரி இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர் தவறு செய்யும்போது எல்லாம் கேள்விகேட்க வேண்டியவர்கள் அமைதியை இருப்பதே எனக்கான தகுதியை நினைக்கிறன்; எழுதுகிறேன். எழுதுவேன்....